இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

பந்து



















மேலெறிந்த பந்தே 
மேகத்தை முட்டிவிடு 
மீண்டும் வந்து-எந்தன் 
கைகளில் கிட்டிவிடு 

மேகத்திரையே வழிவிடு 
நிலவுப் பந்தோடு
விளையாட இடம்கொடு

கோள வடிவம் 
பூண்ட பந்தே-நீ 
கோள்களின் மாதிரியோ?

பறக்கும் பந்தே 
பாறையில் 
பட்டெழும்பும் பந்தே-நீ 
துள்ளல் ஆட்டமிடும் 
கன்று குட்டியோ?

கடலுக்குள் பெய்யும் 
மழைத்துளிகளாய்-நீ 
மறைந்து போவதில்லையே?
மீண்டெழுந்து-நீரில் 
மிதக்கிறாயே?

அலைகளுடன் மட்டும்தான் 
விளையாட்டோ?
என்னிடமும் வருவாயோ?

காற்றை உன்னில் அடைத்து 
காரியம் சாதித்தானோ மனிதன்

உறங்கி கிடக்கும் 
உமது பந்தை எடு 
உருட்டி விளையாடு 
உருண்டு விளையாடு 
உயரே எறிந்து விளையாடு