இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

நாணம்















நாணம் என்பது
பெண்ணிற்கு மட்டுமே
பாத்தியப்பட்டதாமே?

யார் சொன்னது?
யார் நாணத்தை
பெண்களுக்கு பட்டா போட்டு
எழுதிக் கொடுத்தது?

ஆடவனுக்கு
நாணம் வராதென்று
யார் முழுப் பூசணியை
சோற்றில் மறைத்தது?

காதலிக்கும் ஆடவனை
கேட்டுப் பாருங்களேன்
எத்தனை முறை
வெட்கப்பட்டானென
எடுத்துரைப்பான்

கவிஞனை கேளுங்கள்
நாணத்தால் - தன்
எழுதுகோல்
எத்தனை முறை தலைகுனிந்து
எழுதியதென்று சொல்வான்

காதலித்தால்
ஆணுக்கும் நாணம் வரும்
பெண்ணிற்கும் வீரம் வரும்