இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

சென்றுவிடுங்கள்


சாதி பற்றாளர்களே
சாதிவெறி கபோதிகளே

இந்த மன்னன் என் சாதி

அந்த மன்னன் என் சாதி
என்று பல ஆராய்ச்சி செய்யும்
வரலாற்று ஆய்வாளர்களே

எம் தமிழ் மன்னர்களுக்கெல்லாம்

பல சாதிச் சான்றிதழ் அளிக்கும்
கழுசர நாய்களே

சாதித்த தலைவர்களை எல்லாம்

சாதிய தலைவனாக்கி கொண்ட
சாதிக்கு பிறந்தவர்களே

சாதியால் உயர்ந்தவன் முதல்

சாதியால் தாழ்தவன் வரை
சாதியை உயர்த்தி பிடிப்பவர்களே

உங்களெல்லாம் எனது அன்பான வேண்டுகோள்

எனது நண்பர்களாக 
நீங்கள் இருப்பின் அருள் கூர்ந்து
நீங்களே விலகி கொள்ளுமாறு
மிக அன்போடும் பணிவோடும்
வேண்டிக் கொண்டு -மேலும்
உங்களது சாதி பணிகள் தொடர
வாழ்த்துக்களையும் கூறி
இனி சேரா விடையளிக்கிறேன்

தமிழர்களாக இருப்பவர்கள் மட்டும் என்னோடு இருங்கள்

சாதியர்கள் விலகி சென்று விடுங்கள்
உங்களுக்கு சாதி மானம் இருந்தால் விரைவாக விலகி சென்றுவிடுங்கள்