இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

உலக நாடுகளே












உலக நாடுகளே
உங்களது கண்களை
உருட்டிப் பாருங்கள்

மூளைச்சலவையென்று சொல்லும்
முட்டாள்களே - எம்மினத்தின்
முன்னேற்றத்திற்கு
முடக்கு போடும்
மூடர்களே

மலரவிருக்கும் தமிழீழத்திற்காய்
மாவீரர்கள் பல தந்தோம்
சாக விருப்புவது என்பது
செத்து விளையாடும் விளையாட்டா?

எங்களுக்கெல்லாம் பைத்தியமா?
ஆமாம்! பைத்தியம்தான்
எங்கள் தாய்மண் மீது பைத்தியம்
எங்கள் மக்கள் நலன் மீது பைத்தியம்

உலக நாடுகளே
தெரிந்தும் தெரிதாதது போல்
நடித்தது போதும்
நாடகமாடியது போதும்
நயவஞ்சகம் செய்தது போதும்

அட்டூழியங்களும்
அழிவுகளையும்
அநீதிகளையும்
அடாவடித்தனங்களையும்
அடக்குமுறைகளையும் செய்தவனுக்கு
உலக நாடுகளே -இன்னும்
அவனுக்கு துணை போகாதே

குருட்டுக் கண்களுக்கு
இருட்டு விலகட்டும்
உங்களது கண்களுக்கு
உயிர்ப்புக் கிட்டட்டும்
வாய்மூடி இருந்தவர்களுக்கு
வாய்ப்பூட்டு திறக்கட்டும்

வாய்கிழிய பேசியவன்
வாயடைத்துப் போகட்டும்
வசவுகீதம் பாடியவன்
வாய்பிழந்து பார்க்கட்டும்